Saturday, December 6, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன 2-வது தேர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு
நடத்தப்பட்டது.அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.இந்த நிலையில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.அதில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின்விவரம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இப்பட்டியலை பார்க்கலாம்.அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப் படாது. ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்கள் மீண்டும் அழைக்கப்படவில்லை. புதியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்பு சான்றி தழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
BRTE NEWS :885 ஆசிரியர் பயிற்றுனர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்டது.
வழக்கின் விபரம் :
ஒவ்வொரு வருடமும் 500 BRTEs ஆசிரியர்களாக பணிமூப்பு அடிப்படையில் பள்ளிக்கு மாற்றுவது வழக்கம் ஆனால் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு பாதி பேரும் இவ்வாறு மாற்றம் செய்யப்படவில்லை.
இதனை எதிர்த்து BRTs சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அதில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அதன் தீர்ப்பு இன்று (4.12.2014 )வழங்கப்பட்டது.
தீர்பின் விபரம் :
885 ஆசிரியர் பயிற்றுனர்களை 15 நாட்களுக்குள் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று Education secretary,spd(ssa) director school education ஆகியோர்க்கு உத்தரவு வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற கிளை
ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கான மாவட்ட வாரியான விவரம் வெளியீடு