Saturday, January 10, 2015

PGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வை எழுத 2 லட்சத்து 2 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்திருந்தனர். 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்திருந்தவர்களில் 1,90,966 பேர் (94.41 சதவீதம்) தேர்வு எழுதினர். இந்தத் தேர்வைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்களும் மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாநிலம் முழுவதும் தேர்வு அமைதியாக நடைபெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முக்கிய விடைகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும். அதன்பிறகு, அந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்பட்டு இறுதி விடைகள், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
பிப்ரவரியில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
பிழைகளைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு விடைத்தாளும் இரண்டு முறை ஸ்கேன் செய்யப்பட உள்ளது. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்விலேயே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும், முழுமையாக இந்தத் தேர்வில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆள்மாறாட்டம் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக புகைப்படங்களுடன் கூடிய விடைத்தாள்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு1.90 லட்சம் தேர்வர்கள் பங்கேற்பு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு1.90 லட்சம் தேர்வர்கள் பங்கேற்பு
ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., நடத்திய, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில், 11,291 பேர் பங்கேற்கவில்லை. 94.41 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.
தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களில், 20,02,257 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும், 499மையங்களில் இத்தேர்வு நேற்றுநடந்தது. சென்னையில், 34 மையங்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.நேற்று காலை, 10:00 மணிக்கு, அனைத்து மையங்களிலும் தேர்வு துவங்கியது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுத்தனர்; கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.இத்தேர்வை, 1,90,966 பேர் எழுதினர். இது, 94.41 சதவீதம். 11,291 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
'கீ -ஆன்சர்' வதந்தி :நாமக்கல் பகுதியில், டி.ஆர்.பி., வினாத்தாளின் விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) வெளியானதாக, பரபரப்பு தகவல் தேர்வர்களிடம் பரவியது.இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவில் இருந்து வதந்தி பரவியது.அதாவது, வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும் நிபுணர் குழுவில் உள்ள நபர்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி வினாத்தாள் எடுத்துள்ளனர். அதன் விடைக்குறிப்பு விவரங்கள், பெரும் தொகை கொடுக்கும் நபர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, பணம் கொடுத்த நபர்களை, ஒரு குறிப்பிட்ட வீட்டில் தங்க வைத்து, அவர்களுக்கு விடைக்குறிப்பு பட்டியலை கொடுத்து படிக்க வைத்துள்ளனர்.பின், புரோக்கர்களின் உதவியுடன், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், காரின் மூலம் தேர்வு மையத்திற்கு சென்றதாக கூறுகின்றனர். இருந்தும், நேற்று மதியம் வரை எவரும் சிக்கவில்லை.

Friday, January 9, 2015

நாளை நடக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 2.02 லட்சம்பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக
உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கான தேர்வை எழுத, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு, நாளை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது. இந்நிலையில், தேர்வு குறித்து டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, 32 மாவட்டங்களில், 499 மையங்களில் நடக்கிறது.

இதில், 2.02 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். சென்னை மாவட்டத்தில் மட்டும், 34 மையங்களில், 15 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை, சுமுகமாக நடத்துவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும்செய்யப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பி., அதிகாரிகள், தேர்வை நடத்தும் மண்டல அதிகாரிகளாக செயல்படுவர். பள்ளிக் கல்வித் துறையில் உள்ள இயக்குனர்கள், இணைஇயக்குனர்கள், 32 மாவட்டங்களுக்கும் தேர்வு பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, போதுமான அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு, தேர்வு மைய தரை தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற தேர்வர்களுக்கு, உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.