Sunday, May 4, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள் 2) வென்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (மே 6) திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதிóத் தேர்வில் (தாள் 2) தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மே 6 தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ழவிகாட்டுதல்களின்படி மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை இந்த முகாமுக்காக 40 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment