Wednesday, March 18, 2015

2011ல் நியமித்த தமிழாசிரியர்கள் முறைப்படுத்தி உத்தரவு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு முறையான நியமன உத்தரவை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2010-11ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றவர்கள், அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாகநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி மேற்கண்ட தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கென தனியாக பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேற்கண்ட ஆசிரியர்கள் தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான உத்தரவு வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்து அதற்கான சான்றை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment