Sunday, September 7, 2014

வெயிட்டேஜ் மதிப்பெண் பிரச்சினை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் “வெயிட்டேஜ்” என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த “வெயிட்டேஜ்” மதிப்பெண்ணை கூடுதலாக கிராமப்புறங்களில் வாழ்வோர், 
தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் ஆகியோரில் பெரும்பாலோர் வெற்றிபெறவே முடியாது என்பதையும் அதற்கான சூழ்நிலைகளையும் அனைவரும்அறிவர்.

அதனால்தான் இந்த “வெயிட்டேஜ்” முறையை ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சமூகத்தின் மதிப்புமிக்க பணிகளை ஆற்றிவரும் ஆசிரியர் சமூகத்தின் பிரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அணுகவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இனியும் தாமதிக்காமல், ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி,சுமுகமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment